தபால்துறையின் அலட்சியத்தால் இளம்பெண்ணின் அரசுப் பணிக்கான கனவு சிதைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாந்தி நகரில் வசித்து வருபவர் வித்யா (22). இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வரும் சோமசுந்திரம் என்பவரது மகளான இவர், தனது ஏழ்மையான நிலையிலும் சிரமப்பட்டு பி.எஸ்.சி பட்டபடிப்பை முடித்துள்ளார். அரசுப்பணியில் சேரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த வித்யா தமிழக நில அளவைப் பதிவேடுகள் துறையில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார். பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்த காரணத்தினால் அவரை இப்பணிக்கான நேர்முக தேர்விற்கு வருமாறு துறை சார்பில் கடந்த 12-ம் தேதி ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவகத்தில் இருந்து அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 



அதில், நேற்று (16-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்விற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14-ம் தேதி வந்தடைந்துள்ளது. வித்யா வசிக்கும் சாந்தி நகர் விலாசம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேர்பின்புறம் மிக அருகிலேயே உள்ளது. இருப்பினும், கடிதம் 14-ம் தேதியோ அல்லது 15-ம் தேதியோ கூட வழங்கப்படாமல், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 16-ம் தேதி (நேற்று) மதியம் 1.40 மணிக்கு வித்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது. 

காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வுக்கான கடிதம் மதியம் இரண்டு மணியளிவில் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த வித்யா, கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற தனது அரசுப்பணி கனவு ஒரு சிலரின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு விட்டதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். தாமதம் பற்றி புகார் தெரிவிக்க தலைமை தபால் அலுவலகம் சென்ற வித்யாவிடம் இது குறித்து புகார் கடிதம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் அளித்ததாக வித்யா குற்றம்சாட்டினார். மேலும், இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்றார் அவர். இது குறித்து மேட்டுப்பாளையம் தலைமை தபால்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது வித்யாவிடம் அளித்த அதே பதிலை நம்மிடமும் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...