திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பேருந்து சோதனை ஓட்டம் தொடக்கம்

திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திருப்பதி : திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர். சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

எனவே, திருமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கவும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. எனவே, ரூ. 2 கோடி செலவிலான இரு பேட்டரி பேருந்துகளை ஒருமாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பேட்டரி பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் திருப்பதியில் சில நாட்கள் இயக்கிப் பார்த்தனர். இந்த நிலையில் இன்று முதல் சில நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பேருந்தின் சோதனை ஓட்டம் நடை பெறும். முழு அளவிலான சோதனை ஓட்டத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேட்டரி பேருந்துகள் திருமலை - திருப்பதி இடையே பயணிக்கும். சுமார் 4 மணிநேரம் சார்ஜ் செய்தால் பேட்டரி பேருந்து 250 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...