சசிகுமார் கொலை வழக்கு: கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை சுப்பிரமணியபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கொலை தொடர்பாக முபாரக், சதாம், சுபேர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவியதாக அபுதாகீர் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கனி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த கொலையில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக்,சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



அபுதாகீர், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முபாரக்,சதாம் ஆகியோரது வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...