ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிலுவையை சுமந்து ஊர்வலமாக சென்ற பொதுமக்கள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

நீலகிரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இயேசு கிறிஸ்து உயிர் நீத்த மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறித்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த போது அவர் மக்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்த மாதத்தை கிறித்துவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.

இதனையொட்டி ஆண்டுதோறும் கிறித்துவர்களின் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.



ஊர்வலத்தின் போது இயேசுவின் பாடுகளை தியானித்தபடி சென்றனர். மேலும், இந்தாண்டு இறக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை அறிவித்துள்ளதால் இறைவனின் இறக்கத்தை அனைவரும் உணர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பரிகார பவனியின் நோக்கமாக உள்ளதாக மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பின் விருந்து நடைபெற்றது.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...