காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது : ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பி.எஸ்.பதில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார். 

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

விவாதம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் அவகாசம் உள்ளது. வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம்.' என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...