நீலகிரியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் முதியவர் கவலைக்கிடம்

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்ட மாவட்டமாகும். இதனால், வனவிலங்குகள் அடிக்கடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். இப்படி வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள தாம்பட்டி சந்திப்பில் சுந்தர் (60) என்ற முதியவரை சிறுத்தை புலி ஒன்று தாக்கியதாக அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



சம்பவத்தின் போது முதியவர் ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அந்த முதியவர் முகம், கழுத்து பகுதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள்,  மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...