வாடகை காரை பயன்படுத்தி ஆடுகளை கடத்தும் கும்பலுக்கு வலைவீச்சு

திருப்பூரில் வாடகை காரை பயன்படுத்தி ஆடுகளை திருடும் மர்ம கும்பலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஊரக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் வாடகை காரை பயன்படுத்தி ஆடுகளை திருடும் மர்ம கும்பலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஊரக காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில் என்பவர் ஆடுகளை வளர்த்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதியன்று இரவு தனது வீட்டின் முன்பகுதியில் 3 ஆடுகளைக் கட்டி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார் பின்னர், மீண்டும் வழக்கம்போல் காலையில் எழுந்து வந்து பார்த்த போது, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் தெரியாத நிலையில், இது குறித்து உடனடியாக திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊரக காவல்துறையினர் தீவிர மேற்கொண்டனர்.

இதனிடையே, செந்தில் வீட்டருகே உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருத்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத 3 நபர்கள் வாடகை காரில் அப்பகுதிக்கு வந்து முதலில் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்து மீதமிருந்த ஒரு ஆட்டையும் திருடி காரில் ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடு திருடும் கும்பல் குறித்தும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகை கார் பற்றியும் திருப்பூர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...