வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தனியார் நிறுவனம் முற்றுகை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

சாய்பாபா காலனி பகுதியில் சாஜித்குமார் என்பவர் பி.எஸ்.என். மேன் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். மேலும், பாதிப்பணம் செலுத்தியதும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டதாகவும், விசா கிடைத்தவுடன் மீதப்பணத்தை செலுத்த வேண்டுமெனவும் அந்நிறுவனத்தினர் விண்ணப்பித்தவர்களிடம் கூறியுள்ளனர். 

வெளிநாடு செல்வதற்கான இதுபோன்ற பல்வேறு நடைமுறைகள் முடிவடைந்து, பல மாதங்களாகியும் எந்த பதிலும் இல்லாததால், பணத்தைச் செலுத்தியவர்கள் அந்நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால், முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பி.எஸ்.என் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் செலுத்திய பணத்தை உடனடியாக தர வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய அந்நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களை விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...