பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய இ.எஸ்.ஐ.

தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவை: தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது. 

இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. 

விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...