லிங்காயத் சமுதாயத்தினரை தனிமதத்தினராக அங்கீகரித்த கர்நாடக அரசு

கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா என்பவரால் தான் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிவனை வழிபடும் லிங்காயத்துகள் வேதம், சாதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். கர்நாடகா மாநிலத்தில் தான் பெரும்பாலும் லிங்காயத்துகள் கணிசமாக உள்ளனர். லிங்காயத்துக்குச் சொந்தமான வீர வைச மடங்கள் கர்நாடகா முழுவதும் வியாபித்துள்ளன. வீர சைவ மடங்கள் கர்நாடகாவில் அரசியல், சமூக பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மை காலங்களில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புதிய மதம் லிங்காயத் தான். 12-ம் நூற்றாண்டில் வடகர்நாடகத்தில் உருவான வசனக்காரர்கள் இயக்கம் தான் லிங்காயத். வசனக்காரர்கள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து சாதியினரும் அதில் இணைந்தனர். வர்ணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிந்து சகோதரத்துவத்தை வசனகக்காரர்கள் நிலைநாட்டினர். கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய மதம் அறிவித்துள்ளார். லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவர முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...