உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவில் யானைக்கு சிகிச்சையளிக்க பக்தர்கள் கோரிக்கை

சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற 38 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குட்டியாக வாங்கும் போதே அதன் இடதுகால் ஊனமாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த யானை அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலத்தின் போது அழைத்து வரப்பட்டது. யானை வளர, வளர அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. இதையடுத்து, யானை கோவில் முன்பு நின்று, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. அவ்வப்போது யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.



பின்னர், கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை ஒரு பாகனும், உதவி பாகனும் பராமரித்து வருகின்றனர். இடது கால் ஊனம் காரணமாக யானை பல ஆண்டுகளாக வலது காலில் நின்றதால் தற்போது அந்த காலில் வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், யானையால் நிற்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தே கிடக்கிறது. மேலும், யானை சரிவர உணவும் எடுத்துக்கொள்வதில்லை.

யானைக்கு சேலம் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவில் நிர்வாக அதிகாரிகளும் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைக் கண்காணித்து வருகின்றனர். யானைக்கு வழங்க வேண்டிய உணவு பொருள்கள் மற்றும் அதன் தரம், மருந்துகள் ஆகியவற்றை அலட்சியம் காட்டப்பட்டதின் விளைவாகவும், தற்போது யானை உயிருக்குப் போராடி வருகிறது.

எனவே, அவசர அவசியம் கருதி கோவை மண்டல வன கால்நடை மருத்துவர்களை உடனடியாக அனுப்பி வைத்து யானை இராஜேஸ்வரியை பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...