இந்த ஆண்டு சிறப்பாக அமையும்: மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை நம்பிக்கை

நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை: நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோட்டர் சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாருதி சுஷிகி டிசர்ட் ஸ்ட்ரோம் 2018' என்ற தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல்சுற்று கோவையில் இன்று தொடங்கியது. இதில், டி.வி.எஸ்., அணிக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்ற இளம் வீராங்கனை பங்கேற்றுள்ளார்.

இந்த மோட்டர் சைக்கிள் பந்தயம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு இடர்பாடுகளால் போட்டியின் 2-வது நாளே வெளியேற நேரிட்டது. ஆனால், இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஆயத்தமாக உள்ளேன். நான் டி.வி.எஸ். அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," இவ்வாறு பேசினார்.

வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள இந்தப் போட்டி நேற்று நொய்டாவில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...