நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வீடியோ

திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.



திருப்பூர்: திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. 

திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (23). ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவரது பாலமுருகனின் தம்பி வெங்கடேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன் பகை இருந்ததாக தெரிகிறது. இதில் பாலமுருகனும் தலையிட்டுள்ளார். 

இந்த சூழலில், நேற்று மாலை பவானி நகர் பகுதியில் சென்ற பாலமுருகனை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...