உலக சிட்டுக் குருவிகள் தினம் : மீண்டும் கேட்கட்டும் 'கீச்' சத்தம்..!

உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.


கோவை: உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லாமல் சில செல்போன் டவர்களை சாடி வந்த நிலையில், நம் வாழ்க்கை சூழல் மாறியதே சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் சிட்டுக் குருவி ஆர்வலர்கள். 



இது தொடர்பாக பறவைகள் மருத்துவர் நிவேதிதா கூறுகையில், "சிட்டுக் குருவிகள் பெரும்பாலும் சந்தை போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றன. மனிதனுக்கும், இந்த பறவை இனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனிதன் அமைத்து வாழ்ந்த பாரம்பரிய வீடுகள் சிட்டு குருவிகளுக்கு வாழ்விடத்தைத் தந்தன. சந்தையில் சிதறிக்கிடக்கும் பொருட்கள் அவற்றிற்கு உணவாக அமைந்தது. தற்போது அவரை சூப்பர் மார்கெட் மற்றும் வணிக வளாகங்களின் கூரைகளுக்கு இடம் மாறியுள்ளன." என்றார்.

மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சூழல் அனுதினமும் மாறி வருவதே சிட்டுக் குருவிகளை மாயமாக்கி வருவதாகக் குற்றம் சாட்டுகிறார் சிட்டுக் குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன். இது குறித்து அவர் சிம்பிளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

முந்திய காலகட்டத்தில் நமது வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மற்றும் காய்கறிச் செடிகளை வளர்த்து வந்தோம். அந்த செடிகளில் இருக்கும் காய்கறிகளும், பூச்சிகளும் சிட்டுக் குருவிகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. தயாரிக்கப்பட்ட, தற்போது நம் வீடுகளைச் சுற்றி புதர்கள் இல்லை. இதுவே, சிட்டுக் குருவிகள் நகரப் பகுதியை விட்டு சென்றதற்கான முக்கிய காரணம். தற்போது அதற்கான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். 



சிட்டுக் குருவிகள் வாழத் தகுந்த வகையில் மரத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கையான கூடுகளை தயாரித்துள்ளோம். அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த கூடுகளை வீட்டின் முன் பகுதியில் பொருத்தி, அதில் உணவிடுவதன் மூலமாக மீண்டும் சிட்டுக் குருவிகளின் 'கீச்' சப்தத்தை நம்மால் கேட்டிட முடியும். 

சிங்காநல்லூர், வடவள்ளி போன்ற கோவையின் பல்வேறு பகுதிகளில் இந்த செயற்கைக் கூடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கூடுகளில் தற்போது சிட்டுக் குருவிகளின் வருகையை நம்மால் காண முடிகிறது. சிட்டுக் குருவிகளை காப்பாற்ற நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அவற்றிற்கான கூடுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். (தொலைபேசி எண் : 99438-50907‬)

இவ்வாறு அவர் கூறினார். 

செயற்கை கூடுகளை நம் வீட்டு வாசலில் அமைத்து, அவற்றிற்கான உணவையும் அளித்து மீண்டும் 'கீச்' சத்தம் கேட்டிடுவோமே..! 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...