புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. 

கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் இருந்து ஈ.வே. ராமசாமியின் சிலை அகற்றப்படும்" என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். 

சிலை சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலைப் பகுதியை தனியாக பெர்யர்த்து எடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களைத் தேடி வருகின்றனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...