ரதயாத்திரைக்கு எதிர்ப்பு: கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று தமிழகம் வருகிறது. நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்படுகிறது. 

இந்த ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



நேற்று மாலை 6 மணியில் இருந்து வரும் 23-ம் தேதி காலை மணி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

கோவை

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதரீதியில் இந்தியாவை ஆட்சி செய்ய பா.ஜ.க அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஒன்று பட்ட இந்தியாவை சீர் குலைக்கும் விஸ்வ இந்து பரிஷத்-க்கு எதிராக போராட்டம் தொடரும் என்றனர்.

சாலை மறியல் தொடர்பான தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 116 பேரை கைது செய்தனர். இதே போல் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...