உதகையில் கட்டுமானப் பணியின் போது மண் சரிந்ததில் தொழிலாளி பலி

நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 



உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள வண்டிசோலை பகுதியில் பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 10-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட மண்ணை லாரியிலிருந்து மண்ணை இறக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பணியில் அத்திக்கல் கிராமத்தைச் சேர்ந்த துரை (55) என்பவரும் இருந்துள்ளார். 

மண் இறக்குவதற்காக மண்வெட்டி தேவைப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் துரையிடம் மண்வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இருந்து மண்வெட்டி எடுக்க அவர் சென்றுள்ளார். அப்போது, திடீரென மண் சரிந்து துரையின் மேல் விழுந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் துரையின் மேல் மூடியிருந்த மண்ணை அகற்றினர். தொடர்ந்து, ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...