ரத யாத்திரை விவகாரம் : கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டம்

'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: 'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரத யாத்திரை தமிழகத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். 

இதேபோல், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கைது செய்தனர். 

இதே போல், கோவை உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...