மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து த.மா.க.வினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


திருப்பூர்: மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குப் பின் தமிழகத்திலும், குறிப்பாக திருப்பூரில் பின்னலாடைத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தொழில்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும், மாநில அரசு பட்ஜெட்டில் சாமானிய மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்கள் எதுவுமில்லை என அவர்கள் கூறினர். 

இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் 32 வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...