கவுரவ வனப் பாதுகாவலர்களை நீக்குமாறு மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மலை மாவட்டமமான நீலகிரியில், அதே சமயம் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டது. குறிப்பாக, முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் போன்ற பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதேசமயம், இப்பகுதியில் காலம் காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முதுமலை வன விலங்கு சரணாலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1968-ம் ஆண்டு 5 மைல்தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது. இதில், முதுமலை வன விலங்கு சரணாலயம் மட்டுமின்றி, 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் சுற்றுவட்டார பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்தது. இதில், பொதுமக்கள் வாழும் மசினகுடி உள்ளிட்ட சில கிராமங்களும் வந்தன. மக்கள் வாழும் மற்றும் விவசாயம் செய்யும் 46 ஆயிரம் ஏக்கர் நிலமும் அடங்கும். 

கடந்த 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிக்குள் வரும் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் பதிவு செய்ய முடியாது. விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ முடியாது என்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதால், அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. 

இந்நிலையில், 2009-ம் ஆண்டு திடீரென மாவட்ட நிர்வாம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை செய்த பத்திர பதிவுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இது மசினகுடி பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின், இப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வழக்கில் இவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. மாறாக இவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. மேலும், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களைச் சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...