பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் : வதந்தியால் பரபரப்பு

பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை : பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 



மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடு முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில், பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது. இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் வி.எல்.பி., கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கல்லூரியின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரியா வாரியரை போல கண் ஜாடை செய்யும் மாணவிகள், ஒருவருடம் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 



இந்த நிலையில், பிரியா வாரியரைப் போல கண்வித்தைக் காட்டும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற தகவலுக்கு வி.எல்.பி. கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டுப் பானங்கள் கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்யப்படாது என்றும், புத்துணர்வு பானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையைத் திரித்து தவறான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...