மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு

திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. 



தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர், கடந்த 19 வருடமாக மின்வாரிய ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் உள்ள சுமார் 60 அடி உயரம் கொண்ட (110 கேவி) உயர் மின் அழுத்தம் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தனது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரது பணி நிரந்தர கோரிக்கை குறித்த பரிசீலிப்பதாக உறுதியளித்ததின் பேரில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் கோபுரத்தில் இருந்த ராஜகோபால் கீழே இறங்கி வந்தார். பின்பு, போலீசார் விசாரணைக்காக, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மின்வாரிய ஊழியரே மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...