தடையை மீறி கோவையில் 'பஸ் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது.


கோவை: 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களைக் கைது செய்யவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை மீறி, இந்த ஆண்டிலும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக கோவை வரும் தனியார் பேருந்து ஒன்றுக்கு வண்ண காகிதங்கள் ஒட்டி, மேளதாளங்களுடன் பவனி வந்தனர். மேலும், விமான நிலையம் தொடங்கி, நவ இந்தியா சிக்னல் வரை பேருந்தின் மீது ஈறி நடனமாடிய படி வந்தனர். இது பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளையும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சப்பட வைத்தது.



உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...