சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது - கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.


கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று காலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நந்தகுமார் வீட்டிற்கு இன்று வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது போன்று, தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவங்களுக்கு காவல் துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. நக்சலைட் நடமாட்டம் அதிகரித்துள்ளது, தீவிரவாத இயக்கங்கள் செயல்பாடு வெளிப்படையாக நடைபெறுகிறது.

பா.ஜ.க. மீது நடைபெறும் தொடர் தாக்குதல்கள் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை கண்டித்தும் வரும் 23-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டம்- ஒழுங்கை சரி வர நிலைநாட்ட, தமிழக முதலமைச்சர் காவல்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க நிர்வாகிகள் யார் யார்க்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை காவல் துறை கண்டறிந்து, உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. இங்கு ரத யாத்திரை அமைதியாக நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள் தான் இதனை அரசியல் செய்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...