நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றும் நடவு செய்ய திட்டம் : நடிகர் விவேக் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.



உதகையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடவு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் வாரம் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு ''க்ரீன் கலாம்'' என்னும் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு இது நாள் வரை 29 லட்சம் 'மரங்களை நடவு செய்துள்ளேன்.



மேலும், வரும் ஜூன் 5-ம் தேதி நீலகிரி வனத்துறை அளிக்கவுள்ள இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நீலகிரியில் நடுவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

பள்ளி மாணவர்கள் நீலகிரியை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகள் இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும்போது வேண்டும் என்றே பிளாஸ்டிக் பையில் போட்டுத் தரும்படி கேட்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது." என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...