பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரி சிறை பிடிப்பு..!

பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிமேடு அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியில் குடியிருந்து வரும் கருப்புசாமி என்பவர் சல்ப்யூரிக் ஆசிட்டை மொத்தமாக வாங்கி சலவை பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். 

மேலும், லாரி மூலம் வாங்கப்படும் ஆசிட்டை சேமித்து வைத்து பின்னர் யூரியாவுடன் கலந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியாவை கருப்புசாமி முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.  இந்த நிலையில், இன்று லாரி மூலம் சல்ப்யூரிக் ஆசிட்டை கொண்டுவந்து நிரப்பும் பணியில் கருப்புசாமி ஈடுபட்டிருந்தார். இது குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், ஆசிட் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...