கொதிக்கும் காபி கொட்டியதில் 4 வயது சிறுமி படுகாயம்

திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா, அந்தப் பகுதியில் உள்ள திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.நேற்று வழக்கம் போல சிறுமி காவியப்பிரியா பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியில் வேலை பார்க்கும் ஆயா கையில் கொதிக்கும் காபியைக் கொண்டு சென்றதாகவும், எதிர்பாராதவிதமாக காபி முழுவதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதில், சிறுமியின் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வலியால் அலறி துடித்த நிலையில், பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

குழந்தையின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளியில் சிறுமி காபி கொட்டியதன் காரணமாக காயம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். காயம் ஏற்பட்டு உடனடியாக கூறாமல், அரைமணி நேரத்திற்கும் மேலான பின்புதான் தகவல் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டும்", என்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துசாமி, வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...