மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக வேட்பு மனுவை நிராகரிக்கக் கூடாது என உத்தரவு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத் திறனாளியின் வேட்பு மனுக்களை, அவர்களது குறைபாடுகளை காரணமாகக் கொண்டு நிராகரிக்கக் கூடாது எனக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத் திறனாளியின் வேட்பு மனுக்களை, அவர்களது குறைபாடுகளை காரணமாகக் கொண்டு நிராகரிக்கக் கூடாது எனக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 



கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்று திறனாளிகளின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கூடாது, தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்புமாறு கடந்த 16-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரனிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கச் சென்றனர். 



அப்போது, அங்கு வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை ஒருமையில் பேசியதாகவும், அவர்களால் படிக்க முடியாது எனக் கூறி அவமதித்து வேட்புமனுவை நிராகரித்ததாகவும் கூட்டுறவுத்துறை ஆணையர் ராஜேந்திரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கூட்டுறவு தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பார்வையற்றவர்கள் உள்பட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என ஆணையர் எழுத்துப்பூர்வ உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனிடையே, வெளியூர் சென்றிருந்த கூட்டுறவுத் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட பார்வையற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...