இனி ஸ்கேன் செய்து ரயில்களின் நேரங்களை தெரிந்து கொள்ளலாம்

ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை: ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 



கோடைக்காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ரயில்களின் நேர விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். 

தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடங்களில் இந்த குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...