'மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது'

மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார்.

கோவை: மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார். 



கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற வன தின விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. அவ்வாறு, மரங்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை அடையாளம் காண ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. 

மரங்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க சிலர் முற்படுகிறார்கள். இதில் நாம் தலையிட்டு ஒரு நிலையான நகரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காடுகாளால் மட்டுமே புவியின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது காடுகள் தான் கார்பன் சேமிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவை சூழல் மாறுபாட்டில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு மரம் சுமார் 15 கிலோ எடையுள்ள தூசிகளை அகற்றுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

மக்களிடையே மரங்களை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...