30 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வு இல்லை: குமுறலில் வனத்துறை தோட்ட காவலர்கள்

தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில், சமூக வன பாதுகாப்பு காடுகளை உருவாக தொடங்கப்பட்ட இந்த துறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதில் சுமார் 512 மிகை பணி தோட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.



தரிசாக உள்ள மலைக் குன்றுகள் மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அவரவர் இடங்களில் நாற்றுகளை வைத்து சமூக காடுகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இந்த துறை தொடங்கப்பட்டது முதல், இதுவரை தோட்ட காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய நாற்றங்கால் பண்ணையில் வனம் சார்ந்த மர நாற்றுகளை வைத்து அதனை பாதுகாத்து, வனப்பகுதிகளிலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நட இவர்கள் மேற்கொள்ளப்படும் பணி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எங்கள் வாழ்வில் இன்னும் பசுமை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டும் தோட்ட காவலர்கள், பணி உயர்வுக்கான தமிழக அரசு ஆனை 46 வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் 200 பேருக்கு மட்டும் பணி உயர்வினை பெயரளவில் வழங்கிவிட்டு மீதமுள்ள 300 பேரை புறக்கணித்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தோட்ட காவலர்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் மாத வருமானம் ரூ.7 ஆயிரத்தைக் கூட தாண்டுவதில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பமே வறுமையுள்ளது.

இந்த சூழலில், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வை தமிழக அரசு விரைந்து வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...