நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல இயங்கும்

நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த 16-ம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி 3 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பிற்கு பிறகும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் உடனான சந்திப்பின் போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாளை (23-ம் தேதி) முதல் திரையரங்குகள் இயங்கும். மேலும் எந்தெந்த தியேட்டர்களில் எந்த படம் உள்ளதோ அந்த திரையரங்கில் சினிமா காட்சிகள் இடம் பெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...