கோவை மாநகராட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் வெளியிட்டார்.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் வெளியிட்டார்.

அந்த நிதி நிலை அறிக்கையின் படி, பொதுநிதி வருவாய் ரூ.890 கோடியாக உள்ளது. அதில் செலவு ரூ.882 கோடியாகும். குடிநீர் வடிகால் நிதி வருவாய் ரூ.353 கோடியாக உள்ளது. அதில் செலவும் நிகர மதிப்பாக உள்ளது. ஆரம்பக் கல்வியின் வருவாய் ரூ.30 கோடியாக உள்ளது. அதில் செலவு ரூ.215 கோடியாகும். எனவே, வரும் நிதியாண்டுக்கான மொத்தம் வருவாயாக சுமார் ரூ.1274 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் ரூ.1257 கோடியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையாளர் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது நிதி, குடிநீர் விநியோகம், வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதிக்கான மொத்த வரவினம் ரூ.1274.91 கோடி. மொத்த செலவினம் ரூ.1257.17 கோடி. நிகர உபரி ரூ.17.74 கோடி.

சென்ற ஆண்டு 2017-18-ன் வரவு செலவு திருத்திய திட்ட மதிப்பீட்டில் பொது நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி மற்றும் ஆரம்பக் கல்வி நிதிக்கான மொத்த வரவினம் ரூ.957.24 கோடி. மொத்த செலவினம் ரூ.951.46 கோடி. நிகர உபரி ரூ.5.78 கோடி.

அரசின் அனைத்துத் திட்டங்களும் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், வடிகால் வாய்க்கால் பணிகள் முன்னுரிமைத் திட்டங்களாக செயல்படுத்தப்படும். சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளும், ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரத இயக்கம் திட்டங்களும், பசுமைப் பகுதிகள் அமைத்தல், சூரிய மின்சக்தி நிலையங்கள், சர்வதேவச தரத்திலான ஹாக்கி விளையாட்டுத் தளம் போன்ற திட்டங்கள் முன்மாதிரி திட்டங்களாகும்.

'அம்ருட்' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 3 முதல் 4 மாதங்களில் முற்றிலும் மக்கிவிடும் தன்மையுடைய உயிரி பைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பைகள் உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் முதலிய தொழில் நிறுவனங்களில் உபயோகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...