அடிப்படை வசதிகள் வேண்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உக்கான் நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை செய்து கொடுக்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...