கவுரவ விரிவுரையாளரின் சான்றிழ்கள் வாட்ஸ்அப்பில் பரப்பிய விவகாரம் : கல்வித்துறை தலையிட வலியுறுத்தல்

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


உதகை : உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் பேராசிரியரின் சான்றிதழ்களின் நகல்களை, நிரந்தர பேராசிரியர் ஒருவர் கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் அவை போலியானவை என அவதூறு பரப்பி வருவதாக கவரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இது குறித்து கவுரவ விரிவுரையாளர் கூறுகையில், "உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளரின் பணிக்கான நேர்காணலின் போது சான்றிதழ்கள் சரிபார்க்க கொடுக்கப்பட்டது. அவ்வாறு கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர். தன்னைக் கேவலப்படுத்தும் வகையில் எனது சான்றிதழ்களை வாட்ஸ் அப்பில் பதிவு செய்தது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டத் துறை மற்றும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்லூரி இயக்கமும் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பேராசியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார். 

இந்த விவகாரத்தின் மூலம் உதகை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களிடையே பனிப்போர் வெடித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணவேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...