பள்ளியை மீட்டுத் தரக்கோரி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் தர்ணா

திருப்பூர்: திருப்பூர் காது கேளாதோர் பள்ளியை மீட்டுத் தரக்கோரியும், பள்ளி நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரியும் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நிர்வாகத்தை மாற்றுத்திறனாளியான முருகசாமி கவனித்து வருகிறார். 

இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி லட்ச கணக்கில் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களும், தற்போது பயின்று வரும் மாணவர்களும் என 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்களை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து பள்ளியை மீட்டு தர கோரியும், முருகசாமி மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் தரையில் அமர்ந்து மவுன மொழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...