முன்னாள் ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு 3 ஆண்டு சிறை

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை: வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.

அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...