பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்: 282 பேரையும் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...