தூங்கவிடாத துர்நாற்றம்: நள்ளிரவில் சாலை மறியலில் இறங்கிய வெள்ளலூர் மக்கள்

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 650 டன் அளவிலான குப்பை மற்றும் கழிவு பொருட்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. அங்கு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது.

அதிகப்படியான குப்பைகள் மலைபோல் தேங்குவதால், குப்பை கிடங்கை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகையும், துர்நாற்றமும் பொதுமக்களை நாள்தோறும் வாட்டிவதைக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குப்பை கிடங்கிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசிவருவதால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சொந்த வீடு இருந்தும் பக்கத்து தெருக்களில் உள்ள வீடுகளில் குழந்தைகளும் முதியோர்களும் தஞ்சமடைந்து வருகின்றனர்.



பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டி பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...