'சுத்தமான கழிப்பறை இல்லாததால், தண்ணீர் குடிக்காமல் கல்வி பயிலும் அவலம்' - அரசு கல்லூரி மாணவிகள் வேதனை

கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.


கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கென இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒரு கழிப்பறையை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் முறையாகப் பராமரித்து வருகின்றனர். 

ஆனால், மற்றொரு கழிப்பறையிலோ தண்ணீர் கூட வருவதில்லை, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நேப்கின்களை அப்புறப்படுத்த எந்தவொரு வசதியும் இல்லை என மாணவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.



'பெண்களுக்கான இரண்டு கழிப்பறைகளில் ஒன்றை மட்டுமே பெரும்பாலான மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் சுத்தமில்லாத கழிப்பறையையும் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். ஆனால் அதில் தண்ணீர் வருவதில்லை, குவளைகள் கிடையாது, நேப்கின்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட அருவருப்பான சுகாதாரமில்லாத கழிப்பறையை பயன்படுத்துவதைத் தவிர்க்க பெரும்பாலான மாணவிகள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்துவிடுவதாக கூறுகிறார் மாணவி அகிலா சண்முகம்.

கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், மலைப்பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு கலை கல்லூரியில் பயின்று வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து சேரும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பெரும் அவதிகளைச் சந்தித்து வருவதாக வேதனையோடு கூறுகின்றனர்.

இதே கல்லூரியில் ஏராளமான ஆசிரியைகளும் கல்விப் பணி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கென அந்தந்த துறைகளுக்கு அருகிலே கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதை 'ஆசிரியைகளுக்கு மட்டும்' என்று கல்லூரி நிர்வாகம் பூட்டிவைத்து சுத்தமாகப் பராமரித்து வருவதாகவும் மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி கல்வி பயில வரும் மாணவிகள், கழிப்பறையைக் காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதனைத்தடுக்க கல்வி நிறுவனங்கள், மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...