மூளைச் சாவு அடைந்த திருப்பூர் பெண் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.

தானம்

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...