பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவையில் சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...