தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது திருப்பூரில் மோசடி புகார்

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேஷ் - ரேவதி தம்பதியினர். இவர்கள் ஐம்பொன் நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நிமித்தமாக இவர்கள் நாளிதழில் விளம்பரம் செய்தனர். விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.



இதனை நம்பிய தம்பதியினர் ரூ 2,95,000 அவரிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, தங்கம் கேட்ட தம்பதியினருக்கு முறையாக பதில் கூறாத சதீஷ்குமார், ஒரு கட்டத்தில் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த தம்பதியினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், உடனடியாக சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஷ் - ரேவதி தம்பதியினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...