சோலார் மின் உற்பத்தி செய்ய 30 சதவீதம் மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி (சோலார்) உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-



கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனங்களை (Grid Connected Roof Top Solar System) கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அமைப்பவர்களின் உபயோகத்திற்கு போக, மீதமுள்ள மின்சாரம், மின்வாரியத்திற்கு நிகர அளவி (Net Meter) மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது.

மானியம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம். இந்த மானியத்தை பெறுவதற்கு அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.

பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம். மேலும், அலுவலக பணி நேரங்களில் TEDA பிரிவின் உதவி பொறியாளரை நேரடியாகவும் அல்லது 7708064702 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...