பழுதான மோட்டாரை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர், கொடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ஆவார். இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த மணியாள் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதான காரணத்தால் சதீஷ்குமார் அதை சரி செய்ய முயன்றார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையறிந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மணியாளையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...