வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் அழகிய கொன்றைப் பூக்கள்

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். 

கோடை விடுமுறை காரணமாக, ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

ஆழியாரிலிருந்து 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து தான் வால்பாறையை சென்றடைய வேண்டும். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் சாலைகளின் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அவ்வாறு, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது இந்த கொன்றைப் பூக்கள். 

வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி சேர்க்கைக்காக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டி கட்டாயத்தில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கோடை விழாவைக் காண முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வருடம் வால்பாறையில் முன் கூட்டியே கோடை விழா தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மழை: 



வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய சுற்றுலாப் பகுதியான கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளித்து மகிழ்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...