குட்கா வழக்கு: கோவை தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன்

கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.


கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இரண்டு பேரும் தினமும் சூலூர் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...