கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரணைக்கு என்று தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாததால், காவல் நிலையம் சென்ற பிரித்தி, காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது, மாலை விடு திரும்புவார் என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் மனோகர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திரும்பிச் சென்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...