கோவையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார்பைடு கல் வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால், லாப நோக்கில் சில வியாபாரிகள் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உக்கடம் பகுதியில் இன்று 16 பழக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு பழக்கடையில் மட்டும் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம்.



கோவையில் மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழ வரத்து அதிகரிக்கும் நேரத்தில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்படும். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...