பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...